Primary tabs


உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகிப்
பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
கொடு வரிக் குருளை கொளவேட் டாங்கு,
புலவர் பூண் கடன் ஆற்றிப் பகைவர்
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கைக்
கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ!
செல்வர் செல்வ! செரு மேம்படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டுத்
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி,
வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என,
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடன்