தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   2

    தேன் நீவா ழியஎன
    இருபால் பெயரிய உருகெழு மூதூர்
    ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப்
    பெருவிழா அறைந்ததும்; பெருகியது அலர்எனச்
    சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான்
    வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும்;
    மணிமே கலைதான் மாமலர் கொய்ய
    அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
    ஆங்குஅப் பூம்பொழில் அரசிளங் குமரனைப்
    பாங்கில் கண்டுஅவள் பளிக்கறை புக்கதும்
    பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
    துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
    மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
    மணிமே கலையைமணி பல்லவத்து உய்த்ததும்
    உவவன மருங்கின்அவ் வுரைசால் தெய்வதம்
    சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம்
    ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள்
    தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்
    உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகை
    பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
    உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்றி
    மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்
    தீப திலகை செவ்வனம் தோன்றி
    மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்,
    பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
    யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும்
    அறவண அடிகள் ஆபுத் திரன்திறம்,
    நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்,
    அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பாற்
    சிந்தா தேவி கொடுத்த வண்ணமும்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:11:12(இந்திய நேரம்)