தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   3

    மற்றுஅப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
    பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும்
    பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில்
    பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
    காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
    ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்,
    அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
    கொங்குஅலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்
    அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன்
    வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி
    மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
    அறம்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
    காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன்
    ஆயிழை தன்னை அகலாது அணுகலும்
    வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
    மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும்
    ஐஅரி உண்கண் அவன்துயர் பொறாஅள்
    தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும்
    அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
    சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும்
    நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
    ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
    ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
    ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்
    உற்றவள் ஆங்குஓர் உயர்ந்தவன் வடிவாய்ப்
    பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
    நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
    சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும்
    ஆங்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:11:24(இந்திய நேரம்)