Primary tabs
-
மணிமேகலைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

ய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வுஎனப் படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவுஇன்று ஆகிப் புலன்கொளா ததுவே
அருவுரு என்பதுஅவ் வுணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயும் காலை
உள்ளம் உறுவிக்க உறும்இடன் ஆகும்
ஊறுஎன உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சிஆ


