முகப்பு |
காந்தள் (கோடல், தோன்றி) |
1. குறிஞ்சி |
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த |
||
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, |
||
கழல் தொடி, சேஎய் குன்றம் |
||
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. |
உரை | |
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. |
உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |
84. பாலை |
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்; |
||
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
||
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
||
வேங்கையும் காந்தளும் நாறி, |
||
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. |
உரை | |
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
107. மருதம் |
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
||
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
||
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
||
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
||
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
||
யாணர் ஊரனொடு வதிந்த |
||
ஏம இன் துயில் எடுப்பியோயே! |
உரை | |
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
185. குறிஞ்சி |
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
||
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
||
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச் |
||
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
||
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
||
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
||
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
||
நல் மா மேனி அழி படர் நிலையே? |
உரை | |
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
239. குறிஞ்சி |
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
||
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
||
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
||
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
||
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
||
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. |
உரை | |
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
259. குறிஞ்சி |
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
||
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
||
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
||
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
||
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
||
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
||
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
||
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. |
உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
284. குறிஞ்சி |
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப, |
||
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் |
||
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் |
||
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும், |
||
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?- |
||
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி |
||
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் |
||
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே. |
உரை | |
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன் |
361. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
||
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
||
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
||
காலை வந்த முழுமுதற் காந்தள் |
||
மெல் இலை குழைய முயங்கலும், |
||
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. |
உரை | |
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |