|
22
சிறைசெய் காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை பொருட்டால் மடிந்தான்
உதயகுமரன்
என்பது மாதவர்வாய்க்கேட்ட மன்னவன்
மணிமேகலையை
மந்திரியாகிய சோழிகஏனாதியால்
காவல்கொண்ட பாட்டு
]
|
|
|
|
|
|
கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப
|
|
|
நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு
|
|
|
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
|
|
|
உதய குமரற்கு உற்றதை உரைப்பச்
|
உரை
|
5 |
சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து
|
|
|
|
|
|
மாதவர் எல்லாம் மணிமே கலைதனை
|
|
|
இளங்கொடி அறிவதும் உண்டோ இதுஎனத்
|
|
|
துளங்காது ஆங்குஅவள் உற்றதை உரைத்தலும்
|
|
|
ஆங்குஅவள் தன்னை ஆர்உயிர் நீங்கிய
|
|
10 |
வேந்தன் சிறுவனொடு வேறுஇடத்து ஒளித்து,
|
உரை
|
|
|
|
|
மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்துக்
|
|
|
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றுஈங்கு
|
|
|
உயர்ந்துஓங்கு உச்சி உவாமதி போல
|
|
|
நிவந்துஓங்கு வெண்குடை மண்அகம் நிழல்செய
|
|
15 |
வேலும் கோலும் அருள்கண் விழிக்க
|
|
|
|
|
|
தீதுஇன்று உருள்கநீ ஏந்திய திகிரி
|
|
|
நினக்குஎன வரைந்த ஆண்டுகள் எல்லாம்
|
|
|
மனக்குஇனி தாக வாழிய வேந்தே!
|
உரை
|
|
இன்றே அல்ல இப்பதி மருங்கில்
|
|
20 |
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து
|
|
|
|
|
|
பத்தினிப் பெண்டிர் பால்சென்று அணுகியும்
|
|
|
நல்தவப் பெண்டிர் பின்உளம் போக்கியும்
|
|
|
தீவினை உருப்ப உயிர்ஈறு செய்தோர்
|
|
|
பார்ஆள் வேந்தே பண்டும் பலரால்:
|
உரை
|
25 |
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
|
|
|
|
|
|
தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்
|
|
|
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
|
|
|
இந்நகர் காப்போர் யார்என நினைஇ
|
|
|
நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்
|
|
30 |
காவல் கணிகை தனக்குஆம் காதலன்
|
|
|
|
|
|
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
|
|
|
ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய்
|
உரை
|
|
அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின்
|
|
|
பரசு ராமன்நின் பால்வந்து அணுகான்
|
|
35 |
அமர முனிவன் அகத்தியன் தனாது
|
|
|
|
|
|
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
|
|
|
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
|
|
|
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு
|
|
|
உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள்
|
உரை
|
40 |
தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
|
|
|
|
|
|
பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்
|
|
|
யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக்
|
|
|
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
|
|
|
நீவா என்ன, நேர்இழை கலங்கி
|
உரை
|
45 |
மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
|
|
|
|
|
|
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்
|
|
|
புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன்
|
|
|
முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என
|
|
|
மாதுயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
|
உரை
|
50 |
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
|
|
|
|
|
|
கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன்
|
|
|
கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன்
|
|
|
|
|
|
யான்செய் குற்றம் யான்அறி கில்லேன்
|
|
55 |
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
|
|
|
|
|
|
தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும்,
|
உரை
|
|
மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி
|
|
|
நீகேள் என்றே நேர்இழைக்கு உரைக்கும்:
|
உரை
|
|
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
|
|
60 |
பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப்
|
|
|
|
|
|
பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்
|
|
|
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
|
|
|
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
|
|
|
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
|
|
65 |
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
|
|
|
|
|
|
நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப்
|
|
|
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
|
|
|
ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை
|
|
|
ஓங்குஇரு வானத்து மழையும்நின் மொழியது
|
உரை
|
70 |
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்
|
|
|
|
|
|
கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம்
|
|
|
மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம்
|
|
|
பின்முறை அல்லது என்முறை இல்லை
|
|
|
ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால்
|
|
75 |
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
|
|
|
|
|
|
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன
|
|
|
இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப்
|
|
|
பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன்
|
|
|
தாதை வாளால் தடியவும் பட்டனன்.
|
உரை
|
80 |
இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த
|
|
|
|
|
|
மண்ஆள் செல்வத்து மன்னவர் ஏறே!
|
உரை
|
|
தரும தத்தனும் தன்மா மன்மகள்
|
|
|
பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித்
|
|
|
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
|
|
85 |
கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்
|
|
|
|
|
|
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
|
|
|
ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர்எழப்
|
|
|
புனையா ஓவியம் புறம்போந்து என்ன
|
உரை
|
|
மனைஅகம் நீங்கி வாள்நுதல் விசாகை
|
|
90 |
உலக அறவியின் ஊடுசென்று ஏறி
|
|
|
|
|
|
இலகுஒளிக் கந்தின் எழுதிய பாவாய்
|
|
|
உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீஎன,
|
|
|
மாநகர் உள்ளீர் மழைதரும் இவள்என
|
|
|
நாஉடைப் பாவை நங்கையை எடுத்தலும்,
|
உரை
|
95 |
தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின்
|
|
|
|
|
|
மையல் ஊரோ மனமாசு ஒழியாது
|
|
|
மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்
|
|
|
இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
|
|
|
நல்தாய் தனக்கு நல்திறம் சாற்றி
|
|
100 |
மற்றுஅவள் கன்னி மாடத்து அடைந்தபின்,
|
உரை
|
|
|
|
|
தரும தத்தனும் தந்தையும் தாயரும்
|
|
|
பெருநகர் தன்னைப் பிறகிட்டு ஏகித்
|
|
|
தாழ்தரு துன்பம் தலைஎடுத் தாய்என
|
|
|
நாஉடைப் பாவையை நலம்பல ஏத்தி
|
|
105 |
மிக்கோர் உறையும் விழுப்பெருஞ் செல்வத்துத்
|
|
|
|
|
|
தக்கண மதுரை தான்சென்று அடைந்தபின்,
|
உரை
|
|
தரும தத்தனும் தன்மா மன்மகள்
|
|
|
விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது
|
|
|
பெண்டிரைப் பேணேன் இப்பிறப்பு ஒழிகெனக்
|
|
110 |
கொண்ட விரதம் தன்னுள் கூறி
|
உரை
|
|
|
|
|
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
|
|
|
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்
|
|
|
எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு
|
|
|
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்.
|
உரை
|
115 |
அந்த ணாளன் ஒருவன் சென்றுஈங்கு
|
|
|
|
|
|
என்செய் தனையோ இருநிதிச் செல்வ
|
|
|
பத்தினி இல்லோர் பலஅறம் செய்யினும்
|
|
|
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
|
|
|
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்
|
|
120 |
நீட்டித்து இராது நின்நகர் அடைகெனத்
|
|
|
|
|
|
தக்க மதுரை தான்வறிது ஆக
|
|
|
இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே!
|
உரை
|
|
மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டுப்
|
|
|
பொன்தொடி விசாகையும் மனைப்புறம் போந்து
|
|
125 |
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
|
|
|
|
|
|
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
|
உரை
|
|
நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள்
|
|
|
மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன?
|
|
|
ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன்
|
|
130 |
நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன
|
|
|
|
|
|
இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ
|
|
|
உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய்
|
|
|
இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன்
|
|
|
அப்பிறப்பு யான்நின் அடித்தொழில்
கேட்குவன்
|
உரை
|
135 |
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
|
|
|
|
|
|
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
|
|
|
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
|
|
|
மிக்க அறமே விழுத்துணை ஆவது
|
|
|
தானம் செய்எனத் தரும தத்தனும்
|
|
140 |
மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி
|
|
|
|
|
|
ஆங்குஅவன் அவளுடன் செய்த நல்அறம்
|
|
|
ஓங்குஇரு வானத்து மீனினும் பலவால்.
|
உரை
|
|
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்
|
|
|
அமரன் அருளால் அகல்நகர் இடூஉம்
|
|
145 |
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்
|
|
|
|
|
|
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்
|
|
|
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
|
|
|
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
|
|
|
சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த
|
|
150 |
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
|
|
|
|
|
|
தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என
|
|
|
எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
|
|
|
மாலை வாங்க ஏறிய செங்கை
|
|
|
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்,
|
உரை
|
155 |
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
|
|
|
|
|
|
காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக்
|
|
|
கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான்
|
|
|
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
|
உரை
|
|
ஊழிதொறு ஊழி உலகம் காத்து
|
|
160 |
வாழி எங்கோ மன்னவ என்று
|
|
|
|
|
|
மாதவர் தம்முள்ஓர் மாதவன் கூறலும்,
|
|
|
வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன்
|
|
|
இன்றே அல்ல என்றுஎடுத்து உரைத்து
|
|
|
நன்றுஅறி மாதவிர் நலம்பலம் காட்டினிர்
|
|
165 |
இன்றும் உளதோ இவ்வினை உரைம்என,
|
உரை
|
|
|
|
|
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்
|
|
|
தீதுஇன்று ஆக செங்கோல் வேந்துஎன
|
|
|
மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைக்கும்:
|
உரை
|
|
முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில்
|
|
170 |
கடியப் பட்டன ஐந்துஉள அவற்றில்
|
|
|
|
|
|
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
|
|
|
தள்ளா தாகும் காமம் தம்பால்
|
|
|
ஆங்குஅது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்என
|
|
|
நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள்
|
|
175 |
நீங்கார் அன்றே நீள்நில வேந்தே!
|
|
|
|
|
|
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
|
உரை
|
|
சேய்அரி நெடுங்கண் சித்திரா பதிமகள்
|
|
|
காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்
|
|
|
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்.
|
|
180 |
மற்றவள் பெற்ற மணிமே கலைதான்
|
|
|
|
|
|
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
|
|
|
செய்குவன் தவம்எனச் சிற்றிலும் பேரிலும்
|
|
|
ஐயம் கொண்டுஉண்டு அம்பலம் அடைந்தனள்
|
உரை
|
|
ஆங்குஅவள் அவ்இயல் பினளே ஆயினும்
|
|
185 |
நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும்
|
|
|
|
|
|
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
|
|
|
ஆர்இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
|
|
|
காயசண் டிகைவடிவு ஆயினள் காரிகை
|
|
|
காயசண் டிகையும் ஆங்குஉளள் ஆதலின்;
|
உரை
|
190 |
காயசண் டிகைதன் கணவன் ஆகிய
|
|
|
|
|
|
வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
|
|
|
ஈங்குஇவள் பொருட்டால் வந்தனன் இவன்என
|
|
|
ஆங்குஅவன் தீவினை உருத்தது ஆகலின்;
|
உரை
|
|
மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்
|
|
195 |
உதய குமரன் ஒழியான் ஆக,
|
|
|
|
|
|
ஆங்குஅவள் தன்னை அம்பலத்து ஏற்றி
|
|
|
ஓங்குஇருள் யாமத்து இவனைஆங்கு உய்த்துக்
|
|
|
காயசண் டிகைதன் கணவன் ஆகிய
|
|
|
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
|
|
200 |
விஞ்சை மகள்பால் இவன்வந் தனன்என
|
|
|
|
|
|
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
|
|
|
ஆங்குஅவன் தன்கை வாளால் அம்பலத்து
|
|
|
ஈங்குஇவன் தன்னை எறிந்ததுஎன்று ஏத்தி
|
|
|
மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைத்தலும்,
|
உரை
|
205 |
சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி
|
|
|
|
|
|
யான்செயற் பாலது இளங்கோன் தன்னைத்
|
|
|
தான்செய் ததனால் தகவுஇலன் விஞ்சையன்
|
|
|
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
|
|
|
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால்
|
|
210 |
மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்
|
|
|
|
|
|
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
|
|
|
வேந்தர் தஞ்செவி உறுவதன் முன்னம்
|
|
|
ஈங்குஇவன் தன்னையும் ஈமத்து ஏற்றிக்
|
|
|
கணிகை மகளையும் காவல்செய்க என்றனன்
|
|
215 |
அணிகிளர் நெடுமுடி அரசுஆள் வேந்துஎன்.
|
உரை
|
|
|
|
|
சிறைசெய்
காதை முற்றிற்று.
|
|
|