|
28
கச்சி மாநகர் புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை தாயரோடு அறவணர்
அடிகளையும்
தேர்ந்து
கச்சிமாநகர்க்கண்சென்ற பாட்டு
]
|
|
|
|
|
|
ஆங்குத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
|
|
|
வாங்குவில் தனை வானவன் வஞ்சியின்
|
|
|
வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும்
|
|
|
போல்புறம் சுற்றிய புறக்குடி கடந்து,
|
உரை
|
5
|
சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்
|
|
|
|
|
|
கருங்குழல் கழீஇய கலவை நீரும்
|
|
|
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
|
|
|
தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும்
|
|
|
புவிகா வலன்தன் புண்ணிய நல்நாள்
|
|
10
|
சிவிறியும் கொம்பும் சிதறுவிரை நீரும்
|
|
|
|
|
|
மேலை மாதவர் பாதம் விளக்கும்
|
|
|
சீல உபாசகர் செங்கைநறு நீரும்
|
|
|
அறம்செய் மாக்கள் அகில்முதல் புகைத்து
|
|
|
நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும்
|
|
15
|
உறுப்புமுரண் உறுமல் கந்தஉத் தியினால்
|
|
|
|
|
|
செறித்துஅரைப் போர்தம் செழுமனை நீரும்
|
|
|
என்றுஇந் நீரே எங்கும் பாய்தலில்
|
|
|
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
|
|
|
ஒன்றிய புலவுஒழி உடம்பின ஆகித்
|
|
20
|
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
|
|
|
|
|
|
பூமிசை பரந்து பொறிவண்டு ஆர்ப்ப
|
|
|
இந்திர தனுஎன இலங்குஅகழ் உடுத்து,
|
உரை
|
|
வந்துஎறி பொறிகள் வகைமாண்பு உடைய
|
|
|
கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
|
|
25
|
பசுமிளை பரந்து பல்தொழில் நிறைந்த
|
|
|
|
|
|
வெள்ளிக் குன்றம் உள்கிழிந் தன்ன
|
|
|
நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும்
|
|
|
கொடிநிலை வாயில் குறுகினள் புக்கு,
|
உரை
|
|
கடைகாப்பு அமைந்த காவ லாளர்
|
|
30
|
மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும்,
|
|
|
|
|
|
பல்மீன் விலைஞர் வெள்உப்புப் பகருநர்
|
|
|
கள்நொடை யாட்டியர் காழியர் கூவியர்
|
|
|
மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்
|
|
|
என்னுநர் மறுகும் இருங்கோ வேட்களும்
|
உரை
|
35
|
செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்
|
|
|
|
|
|
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய்
கொல்லரும்
|
|
|
மரங்கொல் தச்சரும் மண்ணீட் டாளரும்
|
|
|
வரம்தர எழுதிய ஓவிய மாக்களும்
|
|
|
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
|
|
40
|
மாலைக் காரரும் காலக் கணிதரும்
|
|
|
|
|
|
நலம்தரும் பண்ணும் திறனும் வாய்ப்ப
|
|
|
நிலம்கலம் கண்டம் நிகழக் காட்டும்
|
|
|
பாணர் என்றுஇவர் பல்வகை மறுகும்
|
உரை
|
|
விலங்குஅரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு
|
|
45
|
இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்
|
|
|
|
|
|
வேத்தியல் பொதுவியல் என்றுஇவ் விரண்டின்
|
|
|
கூத்தியல் அறிந்த கூத்தியர் மறுகும்
|
உரை
|
|
பால்வே றாக எண்வகைப் பட்ட
|
|
|
கூலம் குவைஇய கூல மறுகும்
|
|
50
|
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
|
|
|
|
|
|
போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும்
|
|
|
கண்நுழை கல்லா நுண்நூல் கைவினை
|
|
|
வண்ண அறுவையர் வளம்திகழ் மறுகும்
|
உரை
|
|
பொன்உரை காண்போர் நல்மனை மறுகும்
|
|
55
|
பல்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
|
|
|
|
|
|
மறையோர் அருந்தொழில் குறையா மறுகும்
|
|
|
அரைசியன் மறுகும் அமைச்சியன் மறுகும்
|
|
|
எனைப்பெருந் தொழில்செய் ஏனோர் மறுகும்
|
|
|
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
|
உரை
|
60
|
புதுக்கோள் யானையும் பொன்தார்ப் புரவியும்
|
|
|
|
|
|
கதிக்குஉற வடிப்போர் கவின்பெறு வீதியும்
|
|
|
சேண்ஓங்கு அருவி தாழ்ந்தசெய் குன்றமும்
|
|
|
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
|
|
|
விண்ணவர் தங்கள் விசும்புஇடம் மறந்து
|
|
65
|
நண்ணுதற்கு ஒத்த நல்நீர் இடங்களும்
|
|
|
|
|
|
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
|
|
|
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
|
|
|
கண்டுமகிழ்வு உற்றுக் கொண்ட வேடமோடு,
|
உரை
|
|
அந்தர சாரிகள் அமர்ந்துஇனிது உறையும்
|
|
70
|
இந்திர விகாரம் எனஎழில் பெற்று
|
|
|
|
|
|
நவைஅறு நாதன் நல்அறம் பகர்வோர்
|
|
|
உறையும் பள்ளிபுக்கு இறைவளை நல்லாள்
|
|
|
கோவலன் தாதை மாதவம் புரிந்தோன்
|
|
|
பாதம் பணிந்துதன் பாத்திர தானமும்
|
உரை
|
75
|
தானப் பயத்தால் சாவக மன்னவன்
|
|
|
|
|
|
ஊனம்ஒன்று இன்றி உலகுஆள் செல்வமும்
|
|
|
செல்வன் கொணர்ந்துஅத் தீவகப் பீடிகை
|
உரை
|
|
ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும்
|
|
|
உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வம்
தோன்றி
|
|
80
|
மனம்கவல் கெடுத்ததும் மாநகர் கடல்கொள
|
|
|
|
|
|
அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
|
|
|
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்
|
|
|
சாவக மன்னன் தன்நாடு எய்தத்
|
|
|
தீவகம் விட்டுஇத் திருநகர் புகுந்ததும்
|
|
85
|
புக்கபின் அந்தப் பொய்உரு வுடனே
|
|
|
|
|
|
தக்க சமயிகள் தம்திறம் கேட்டதும்
|
|
|
அவ்வவர் சமயத்து அறிபொருள் எல்லாம்
|
|
|
செவ்விது அன்மையிற் சிந்தைவை யாததும்
|
|
|
நாதன் நல்அறம் கேட்டலை விரும்பி
|
|
90
|
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்
|
|
|
|
|
|
சொல்லினள் ஆதலின், தூயோய் நின்னைஎன்
|
உரை
|
|
நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுஎனத்
|
|
|
தையல் கேள்நின் தாதையும் தாயும்
|
|
|
செய்ததீ வினையில் செழுநகர் கேடுஉறத்
|
|
95
|
துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன்
|
|
|
|
|
|
அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
|
|
|
மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து
|
|
|
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
|
|
|
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
|
|
100
|
மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்
|
|
|
|
|
|
புரிந்த யான்இப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம்
|
|
|
திருந்திய நல்நகர்ச் சேர்ந்தது கேளாய்:
|
உரை
|
|
குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
|
|
|
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்நாள்
|
|
105
|
துப்புஅடு செவ்வாய்த் துடிஇடை யாரொடும்
|
|
|
|
|
|
இப்பொழில் புகுந்துஆங்கு இருந்த எல்லையுள்
|
உரை
|
|
இலங்கா தீவத்துச் சமன்ஒளி என்னும்
|
|
|
சிலம்பினை எய்தி வலம்கொண்டு மீளும்
|
|
|
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
|
|
110
|
கருமுகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்
|
|
|
|
|
|
அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்
|
|
|
புரையோர் தாமும்இப் பூம்பொழில் இழிந்து
|
|
|
கல்தலத்து இருந்துழிக் காவலன் விரும்பி
|
உரை
|
|
முன்தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
|
|
115
|
பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின்
|
|
|
|
|
|
அங்குஅவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம்
|
|
|
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
|
|
|
வேத்தவை யாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில்
|
|
|
பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும்
|
|
120
|
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை
|
|
|
|
|
|
இன்ப ஆர்அமுது இறைவன் செவிமுதல்
|
|
|
துன்பம் நீங்கச் சொரியும் அந்நாள்,
|
உரை
|
|
நின்பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை
|
|
|
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
|
|
125
|
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
|
|
|
|
|
|
தங்கா நல்அறம் தானும் கேட்டு
|
|
|
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றித்
|
|
|
தன்னான் இயன்ற தனம்பல கோடி
|
|
|
எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்துத்
|
|
130
|
தொழுதவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய
|
|
|
|
|
|
வான்ஓங்கு சிமையத்து வால்ஒளிச் சயித்தம்
|
|
|
ஈனோர்க்கு எல்லாம் இடர்கெட இயன்றது
|
|
|
கண்டுதொழுது ஏத்தும் காதலின் வந்துஇத்
|
|
|
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
|
|
135
|
காவிரிப் பட்டினம் கடல்கொளும் என்றஅத்
|
|
|
|
|
|
தூஉரை கேட்டுத் துணிந்துஇவண் இருந்தது
|
உரை
|
|
இன்னும் கேளாய் நல்நெறி மாதே!
|
|
|
தீவினை உருப்பச் சென்றநின் தாதையும்
|
|
|
தேவரில் தோன்றிமுன் செய்தவப் பயத்தால்
|
|
140
|
ஆங்குஅத் தீவினை இன்னும் துய்த்துப்
|
|
|
|
|
|
பூங்கொடி முன்னவன் போதியில் நல்அறம்
|
|
|
தாங்கிய தவத்தால் தான்தவம் தாங்கிக்
|
|
|
காதலி தன்னொடு கபிலையம் பதியில்
|
|
|
நாதன் நல்அறம் கேட்டுவீடு எய்தும்என்று
|
|
145
|
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
|
|
|
|
|
|
சொல்பயன் உணர்ந்தேன் தோகை யானும்
|
உரை
|
|
அந்நாள் ஆங்குஅவன் அறநெறி கேட்குவன்
|
|
|
நின்னது தன்மைஅந் நெடுநிலைக் கந்தில்துன்னிய
|
|
|
துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ
|
|
150
|
தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன்
|
|
|
|
|
|
ஆங்குஅவன் தானும்நின் அறத்திற்கு ஏதுப்
|
|
|
பூங்கொடி கச்சி மாநகர் ஆதலின்
|
|
|
மற்றுஅம் மாநகர் மாதவன் பெயர்நாள்
|
|
|
பொன்தொடி தாயரும் அப்பதிப் படர்ந்தனர்
|
உரை
|
155
|
அன்னதை அன்றியும் அணியிழை கேளாய்:
|
|
|
|
|
|
பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து
|
|
|
மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
|
|
|
அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
|
|
|
இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய்
|
|
160
|
ஆர்உயிர் மருந்தே! அந்நாட்டு அகவயின்
|
|
|
|
|
|
கார்எனத் தோன்றிக் காத்தல்நின்
கடன்என
|
|
|
அருந்தவன் அருள, ஆயிழை வணங்கித்
|
உரை
|
|
திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்திக்
|
|
|
கொடிமதில் மூதூர்க் குடக்கண்நின்று ஓங்கி
|
|
165
|
வடதிசை மருங்கின் வானத்து இயங்கி,
|
|
|
|
|
|
தேவர் கோமான் காவல் மாநகர்
|
|
|
மண்மிசைக் கிடந்தென வளம்தலை மயங்கிய
|
|
|
பொன்நகர் வறிதாப் புல்என்று ஆயது
|
|
|
கண்டுஉளம் கசிந்த ஒண்தொடி நங்கை
|
|
170
|
பொன்கொடி மூதூர்ப் புரிசை வலம்கொண்டு
|
|
|
|
|
|
நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து
|
|
|
தொடுகழல் கிள்ளி துணைஇளங் கிள்ளி
|
|
|
செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப்
|
|
|
பைம்பூம் போதிப் பகவற்கு இயற்றிய
|
|
175
|
சேதியம் தொழுது, தென்மேற்காகத்
|
|
|
|
|
|
தாதுஅணி பூம்பொழில் தான்சென்று எய்தலும்,
|
உரை
|
|
வையம் காவலன் தன்பால் சென்று
|
|
|
கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்
|
|
|
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
|
|
180
|
நாவலம் தீவில் தான்நனி மிக்கோள்
|
|
|
|
|
|
அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு
|
|
|
தங்காது இப்பதித் தருமத வனத்தே
|
|
|
வந்து தோன்றினள் மாமழை போல்என,
|
உரை
|
|
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக்
|
|
185
|
கந்திற் பாவை கட்டுரை எல்லாம்
|
|
|
|
|
|
வாய்ஆ கின்றன வந்தித்து ஏத்தி
|
|
|
ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று,
|
உரை
|
|
செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ
|
|
|
கொங்குஅவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
|
|
190
|
நலத்தகை நல்லாய் நல்நாடு எல்லாம்
|
|
|
|
|
|
அலத்தல் காலை ஆகியது அறியேன்
|
உரை
|
|
மயங்குவேன் முன்னர்ஓர் மாதெய்வம் தோன்றி
|
|
|
உயங்காது ஒழிநின் உயர்தவத் தால்ஓர்
|
|
|
காரிகை தோன்றும் அவள்பெருங் கடிஞையின்
|
|
195
|
ஆர்உயிர் மருந்தால் அகல்நிலம் உய்யும்
|
|
|
|
|
|
ஆங்குஅவள் அருளால் அமரர்கோன் ஏவலில்
|
|
|
தாங்கா மாரியும் தான்நனி பொழியும்
|
|
|
அந்நாள் இந்த அகநகர் புகுந்த
|
|
|
பின்நாள் நிகழும் பேர்அறம் பலவால்
|
|
200
|
கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது
|
|
|
|
|
|
பாரக விதியில் பண்டையோர் இழைத்த
|
|
|
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
|
|
|
மாமணி பல்லவம் வந்தது ஈங்குஎனப்
|
|
|
பொய்கையும் பொழிலும் புனைமின்என்று
அறைந்ததுஅத்
|
|
205
|
தெய்வதம் போயபின் செய்துயாம் அமைத்தது
|
|
|
|
|
|
இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட,
அத்
|
உரை
|
|
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
|
|
|
கண்டுஉளம் சிறந்த காரிகை நல்லாள்
|
|
|
பண்டைஎம் பிறப்பினைப் பான்மையில்
காட்டிய
|
|
210
|
அங்குஅப் பீடிகை இதுஎன அறவோன்
|
|
|
|
|
|
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத்
|
|
|
தீவ திலகையும் திருமணி மேகலா
|
|
|
மாபெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
|
|
|
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
|
|
215
|
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
|
|
|
|
|
|
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி,
|
|
|
பங்கயப் பீடிகை பசிப்பிணி மருந்துஎனும்
|
|
|
அங்கையின் ஏந்திய அமுத சுரபியை
|
|
|
வைத்துநின்று எல்லா உயிரும் வருகெனப்
|
உரை
|
220
|
பைத்தரவு அல்குல் பாவைதன் கிளவியின்
|
|
|
|
|
|
மொய்த்த மூவறு பாடை மாக்களில்
|
|
|
காணார் கேளார் கால்முடம் ஆனோர்
|
|
|
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
|
|
|
படிவ நோன்பியர் பசிநோய் உற்றோர்
|
|
225
|
மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்
|
|
|
|
|
பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும்
|
|
|
மன்உயிர் அடங்கலும் வந்துஒருங்கு ஈண்டி
|
உரை
|
|
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர்உயிர்
மருந்தாய்ப்
|
|
|
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
|
|
230
|
நீரும் நிலமும் காலமும் கருவியும்
|
|
|
|
|
|
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
|
|
|
பெருகியது என்னப் பெருவளம் சுரப்ப
|
|
|
வசித்தொழில் உதவி வளம்தந் ததுஎனப்
|
|
|
பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
|
|
235
|
செல்லுங் காலை, -தாயர் தம்முடன்
|
உரை
|
|
|
|
|
அல்லவை கடிந்த அறவண வடிகளும்
|
|
|
மல்லல் மூதூர் மன்உயிர் முதல்வி
|
|
|
நல்அறச் சாலை நண்ணினர் சேறலும்
|
|
|
சென்றுஅவர் தம்மைத் திருவடி வணங்கி
|
|
240
|
நன்றுஎன விரும்பி நல்அடி கழுவி
|
|
|
|
|
|
ஆசனத்து ஏற்றி அறுசுவை நால்வகைப்
|
|
|
போனகம் ஏந்திப் பொழுதினில் கொண்டபின்
|
|
|
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
|
|
|
வாய்வ தாகஎன் மனப்பாட்டு அறம்என
|
|
245
|
மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமே கலைஎன்.
|
உரை
|
|
|
|
|
கச்சி மாநகர் புக்க காதை முற்றிற்று.
|
|
|