ப
வியாக்கியானத்தில்
வந்துள்ள உவமைகள்
‘ஆறு கிண்ணகமெடுத்தால்
நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து
பிழைக்கும்; அவை போல’
பக். 58.
‘சூரியன்முன் நட்சத்திரங்கள்
போலவும், மஹாமேரு மலையினுச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும்’ பக். 60.
‘கண்ட இடமெங்கும் பயிர்பட்டிருக்கும் நன்செய் நிலம் போன்று’ பக். 60. ‘கரை கட்டாக்
காவிரி போன்று’
பக். 60.
‘நாமனைவரும் பிரபந்நர்களாய்
இருப்பினும், ஓராண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப்பொருள்களைத் தேடிக்கொள்வது
போன்று’ பக். 63. ‘மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப்போன்று’ பக். 63.
‘யானைக்குக் குதிரை
வைத்தல் போன்று’
பக். 65.
‘இருவர்கூடப்
பள்ளியிலோதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச்
சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று’
பக். 66.
‘அருச்சுனன் பல
முறை வணங்கக்கூறியது போன்று’
பக். 67.
‘நெற்செய்யப்
புல் தேயுமா போலே’
பக். 67.
‘அணு அளவினதான ஆத்துமாவை
அறியுமாறு போன்று’
பக். 71.
‘பிறவிக்குருடன்
பொருள்களைப் பார்க்கின்றிலன் எனினும், தெளிந்த பார்வையினையுடையவனும் பார்க்கின்றிலன்
எனினும், பார்க்கமாட்டாமையில் இருவரும் ஒப்பாதல் போல’
பக். 71.
‘இறைவனாகிய தான்
உயிர்களைச் சரீரமாகக்கொண்டு தாரகனாய் எல்லாரையும் ஏவுகின்றவனாய் இருப்பது போன்று’
பக்.
73.
‘அரசர்கட்கு
நாடெங்கும் தமது ஆணை செல்லுமாயினும், தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக்
|