செந்தமிழ்

செந்தமிழ்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தமிழ் மொழி -------------- ஆண்டு பழமை உடையது.

தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டு பழமை உடையது.

2.  சமற்கிருதத்தில் இராமாயணத்தை எழுதியவர் -----------------

சமற்கிருதத்தில் இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி

3.  சமற்கிருதத்தில் பாரதத்தை எழுதியவர் ---------------

சமற்கிருதத்தில் பாரதத்தை எழுதியவர் வியாசர்

4.  வடமொழி என்பதன் மற்றொரு பெயர் -------------- ........................................

வடமொழி என்பதன் மற்றொரு பெயர் சமற்கிருதம்

5.  குமரிக் கண்டம் --------------- என்றும் அழைக்கப்படும்.

குமரிக் கண்டம் லெமூரியாக் கண்டம் என்றும் அழைக்கப்படும்.

6.  குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் ------------- மொழி பேசினார்கள்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள்.

7.  தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் -----------------.

தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் ழ, ற, ன

8.  பாண்டிய நாட்டுக் கோட்டைக் கதவில் ---------------- இருந்தன.

பாண்டிய நாட்டுக் கோட்டைக் கதவில் முத்துகள், மணிகள் இருந்தன.

9.  தமிழ்மொழி -------------- வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் சிறப்பு உடையது.

தமிழ்மொழி நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் சிறப்பு உடையது.

10.  சில மொழிகள் வளரத் ------------- உதவி உள்ளது.

சில மொழிகள் வளரத் தமிழ் உதவி உள்ளது.