யாப்பு, அணி

யாப்பு, அணி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  உவமை அணி என்றால் என்ன?

செய்யுளில் ஒன்றுக்கு உவமையாக மற்றொன்றைச் சொல்வது உவமை அணி எனப்படும்.

2.  செய்யுள் உறுப்புகள் சிலவற்றைக் கூறுக.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுள் உறுப்புகளாகும்.

3.  யாப்பின் பா வகைகள் யாவை?

யாப்பின் பா வகைகள்

1) வெண்பா

2) ஆசிரியப்பா

3) கலிப்பா

4) வஞ்சிப்பா

5) மருட்பா

என ஐந்து ஆகும்.

4.  உவமை அணியின் பகுதிகள் யாவை?

1) ஒப்பாகச் சொல்லப்பெறும் பொருள்

2) உண்மைப்பொருள்

3) பொதுப் பண்பு

4) உவம உருபு

என்பன உவமை அணியின் பகுதிகளாகும்.

5.  "தாயே உயிரே! தமிழே நினைவணங்கும்" என்று தொடங்கும் செய்யுளின் பாவகையைக் கூறுக

இச்செய்யுள் வெண்பா வகையைச் சார்ந்தது ஆகும்.

6.  யாப்பு என்றால் என்ன?

யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள்.

7.  தமிழில் இலக்கணம் எத்தனை வகைபெறும்?

தமிழில் இலக்கணம் ஐந்து வகைபெறும்.

8.  செய்யுளுக்கு மேலும் இனிமை சேர்ப்பது எது?

செய்யுளுக்கு மேலும் இனிமை சேர்ப்பது அணி இலக்கணம் ஆகும்.

9.  ‘கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து’ இதில் வந்துள்ளது எந்த அணி?

இதில் வந்துள்ளது உவமை அணி ஆகும்.

10.  உவம உருபுகள் சிலவற்றைக் கூறுக.

போல, போன்ற, அன்ன, மான என்பன உவம உருபுகளில் சிலவாகும்.