|
|
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்; |
|
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'' |
|
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
|
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
|
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
|
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
|
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! |
உரை |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|
|
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
|
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
|
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
|
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
|
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
|
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
|
காலொடு பட்ட மாரி |
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே |
உரை |
|
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
|
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
|
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
|
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து, |
|
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
|
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
|
வினை முடித்தன்ன இனியோள் |
|
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? |
உரை |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|
|
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
|
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
|
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
|
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
5 |
''அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு'' எனக் கூறின், |
|
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
|
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே |
உரை |
|
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|
|
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, |
|
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, |
|
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் |
|
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப, |
5 |
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி |
|
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும், |
|
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல் |
|
இளையர்த் தரூஉம் வாடையொடு |
|
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே. |
உரை |
|
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்
|
|
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
|
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
|
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
|
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
''இவர் யார்?'' என்குவள் அல்லள்; முனாஅது, |
|
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
|
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
|
வல் வில் ஓரி கானம் நாறி, |
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. |
உரை |
|
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
|
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
|
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
|
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
|
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
|
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
|
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
|
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. |
உரை |
|
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
|
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
|
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
|
திரு மணி புரையும் மேனி மடவோள் |
|
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
|
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
|
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! |
உரை |
|
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்
|
|
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
|
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
|
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
|
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
|
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
|
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
|
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
|
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. |
உரை |
|
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், |
|
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த |
|
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், |
|
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர! |
5 |
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
|
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், |
|
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் |
|
பழையன் வேல் வாய்த்தன்ன நின் |
|
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. |
உரை |
|
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
|
|