|
|
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் |
|
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் |
|
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, |
|
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் |
5 |
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி |
|
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து, |
|
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின், |
|
மீன் எறி பரதவர் மட மகள் |
|
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே. |
உரை |
|
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்
|
|
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! |
|
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, |
|
நின் குறை முடித்த பின்றை, என் குறை |
|
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; |
5 |
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
|
நின் கிளை மருங்கின், சேறிஆயின், |
|
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக் |
|
கானக் குறவர் மட மகள் |
|
ஏனல் காவல் ஆயினள் எனவே. |
உரை |
|
காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்
|
|
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
|
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
|
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
|
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
|
மாயா வேட்டம் போகிய கணவன் |
|
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
|
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. |
உரை |
|
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|
|
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
|
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
|
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
|
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
|
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
|
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
|
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
|
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? |
உரை |
|
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
|
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
|
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
|
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
|
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
|
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
|
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
|
வண்டு படு வான் போது கமழும் |
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. |
உரை |
|
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
|
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல் |
|
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, |
|
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, |
|
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு |
5 |
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
|
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் |
|
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, |
|
முறி திமிர்ந்து உதிர்த்த கையள், |
|
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? |
உரை |
|
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|
|
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
|
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
|
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
|
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
|
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
|
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
|
ஆனாக் கௌவை மலைந்த |
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
|
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
|
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
|
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
|
கணையர், கிணையர், கை புனை கவணர், |
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
|
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
|
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
|
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! |
உரை |
|
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
|
''ஒன்றுதும்'' என்ற தொன்று படு நட்பின் |
|
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, |
|
''அன்னவோ, இந் நன்னுதல் நிலை?'' என, |
|
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி |
5 |
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
|
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், |
|
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, |
|
உச்சிக் கட்டிய கூழை ஆவின் |
|
நிலை என, ஒருவேன் ஆகி |
10 |
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
|
|
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் |
|
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி, |
|
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல், |
|
''உண்'' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர் |
5 |
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, |
|
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர் |
|
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி, |
|
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி |
|
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்? |
10 |
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, |
|
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள், |
|
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல, |
|
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே! |
உரை |
|
மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்
|
|