Primary tabs
-
4)
தொல்காப்பியம், நன்னூல் ஆசிரியர்கள் எழுத்து ஒலிகள் பிறப்பதில் தெரிவிக்கும் கருத்துகளின் வேற்றுமையைப் புலப்படுத்துக.
வேற்றுமைகள் :(1)தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களை மூன்று என்று குறிப்பிடுகின்றார். நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியம்நன்னூல்தலைநெஞ்சுகழுத்துகழுத்துநெஞ்சுஉச்சி (தலை)மூக்கு(2)எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் ஒட்டு மொத்தமாக எட்டு என்று விளக்குகின்றார். நன்னூலார், இவற்றில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பிற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.