தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0 பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    கவிதையால் செய்யப்பட்டது காப்பியம். காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் என்றும் கூறுவர். தமிழில் ஐந்து பெருங்காப்பியங்கள் உள்ளன. இவற்றைத் தவிரப் பிற காப்பியங்களும், சிறு காப்பியங்களும் உள்ளன. காப்பியங்களுக்குப் பல தகுதிகள் உள்ளன. அவற்றில் இரண்டு தகுதிகள் முக்கியமானவை.

    • நிகரில்லாத தலைவனைப் பெற்றிருக்க வேண்டும்.

    • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளைக் கூறுவனவாக இருக்க வேண்டும்.

    இனிக் காப்பியங்கள் தோன்றிய காலத்தில் தமிழர் பண்பாடு எந்த நிலையில் இருந்தது என்பதை இந்தப் பாடத்தில் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 11:49:49(இந்திய நேரம்)