Primary tabs
1.6 தொகுப்புரை
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் காப்பியங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பெண்களின் ஏற்றத்தைக் காப்பியங்கள் பேசுகின்றன. சமயக் கருத்துகளைக் காப்பியங்கள் அடித்தளங்களாகக் கொண்டுள்ளன. நீதிகளைக் கதைகள் வழியாகக் கற்பிக்கும் நெறியைக் காப்பியங்கள் வளர்த்தன. இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
-
சச்சந்தனைக் கொன்றவன் யார்?
-
வாழ்க்கையைச் சிந்தாமணி எப்படி வருணிக்கின்றது?
-
இருவினை நீங்கச் சிந்தாமணி கூறும் போர் முறை எப்படிப்பட்டது?
-
குண்டலகேசியின் கதையைச் சுருங்கக் கூறுக.
-
வளையாபதி குண்டலகேசி கற்பிக்கும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி எழுதுக.
-