தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.1 தமிழில் அற நூல்கள்

  • 3.1 தமிழில் அற நூல்கள்

    சங்க இலக்கியங்களிலேயே ஆங்காங்கு உரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குப் புலவர்கள் தவறவில்லை. சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களை வரைந்தனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன. அவையாவன:

    • திருக்குறள்

    • நாலடியார்

    • நான்மணிக்கடிகை

    • இன்னா நாற்பது

    • இனியவை நாற்பது

    • திரிகடுகம்

    • ஆசாரக் கோவை

    • பழமொழி

    • சிறுபஞ்சமூலம்

    • முதுமொழிக்காஞ்சி

    • ஏலாதி

    மேற்கூறிய பதினொரு நூல்கள் தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன. இவை தவிர, பிற்காலத்தில் ஒளவையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் நீதிநூல்களை இயற்றியுள்ளனர். சிறுவர்க்கெனவே ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் (இயற்றியவர்: ஒளவையார்), வெற்றிவேற்கை (இயற்றியவர்: அதிவீரராம பாண்டியன்), நன்னெறி (இயற்றியவர்: சிவப்பிரகாசர்) போன்ற நீதிநூல்கள் எழுதப்பட்டன. சதகம் எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறித் தொகுப்புகளும் தோன்றின.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:48:56(இந்திய நேரம்)