Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. வ.உ.சிதம்பரனாரின் சிறை வாழ்வு பற்றிக் கூறுக.
சிறையில் கிடந்து நலிந்த சிதம்பரம் பிள்ளைக்குச் சில நாள் உணவு அனுப்பிய ஒருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் வ.உ.சி. சாக்குத் துணியால் நெய்த சட்டை, கால் சட்டை, குல்லா அணிந்திருந்தார். சணல் கிழிக்கும் இயந்திரத்தில் பணி செய்து வ.உ.சி.க்குக் கைத்தோல் உரிந்தது. பிறகு அவரை மாட்டிற்குப் பதிலாகச் செக்கில் பூட்டினர்.
