Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II5.அகப்பொருளின் வகை பற்றி எழுதுக.
அருந்தமிழ் அகப்பொருளானது கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என ஏழு வகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன ஐந்திணைகள் ஆகும். இவையே இருபாலரும் ஒருமித்து அன்பு காட்டும் பகுதி ஆதலின் அன்பின் ஐந்திணை எனப்பட்டது. கைக்கிளை - ஒரு தலைக் காமம் என்றும், பெருந்திணை - பொருந்தாக் காமம் என்றும் குறிப்பிடப் பெறுகின்றன.