தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D02122-2.0 பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து அமைந்துள்ளது.

    வரைவியலில் மொத்தம் 29 நூற்பாக்கள் உள்ளன. இவற்றுள் முதல் ஒன்பது நூற்பாக்களில் கூறப்பட்ட வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் ஆகியன பற்றி முன் பாடத்தில் கண்டோம். வரைவியலில் ஏனை இருபது நூற்பாக்களில் கூறப்படும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

    களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் மூவகைக் கிளவித் தொகைகள்.

    உடன்போக்கின் வகை, விரிவு.

    செவிலி புலம்புதல், நற்றாய் புலம்புதல், மருட்சி, கண்டோர் இரங்குதல், செவிலி பின்தேடிச் செல்லுதல் என்னும் கற்புத் தொடர்பான கவ்வையின் வகைகள்.

    மீட்சி என்பதன் வகை, விரிவு.

    தன்மனை வரைதலின் விரிவு.

    உடன்போய் வரைந்து மீளுதலின் விரிவு.

    உடன்போக்கில் இருந்து மீண்டு வரைவதன் விரிவு.

    உடன்போக்கு இடையீட்டு வகையின் விரிவு.

    முதலான செய்திகள் இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:56:09(இந்திய நேரம்)