Primary tabs
-
5.0 பாட முன்னுரை
எழுப்பப்பெறுவதும் எழுதப்படுவதும் ஆகிய காரணங்களால் பெயர்பெற்ற எழுத்து அசைக்கு உறுப்பாகும்; எழுத்து ஒன்றொடு ஒன்றும் இரண்டுமாகத் தொடர்ந்து இயங்கும்போது உண்டாகும் உறுப்பு அசை; அசை தனித்து நின்றும் இரண்டு மூன்று நான்கு என்று இயைந்து நின்றும் உருவாவது சீர்; ஒரு சீரின் ஈற்றசையோடு வரும்சீரின் முதல் அசை தளைந்து (பிணைந்து) நிற்பதால் தோன்றுவது தளை; இத்தனையும் முந்தைய பாடங்களில் படித்து வந்துள்ளோம்.
இப்போது இந்தப் பாடத்தில், தளைகள் பொருந்தி நடப்பதாகிய அடியைப் பற்றிப் படிக்க இருக்கின்றோம்.
மேலும், அடி இரண்டோ சீர்கள் இரண்டோ படைக்கும்போது அவை அழகுற அமையவேண்டி எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் மொழிக் கூறுகளைப் பயன்படுத்தித் தொடுப்பதாகிய தொடையைப் பற்றியும் படிக்க இருக்கின்றோம்.