தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

         இலக்கியத் திறனாய்வு என்பது நேரடியாக மேலை நாட்டிலிருந்து இங்கே இறக்குமதியான ஓர் அறிவாற்றல் திறன் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது தவறானது. இங்கே, தமிழில் ஒன்றுமில்லை ; எல்லாம் மேலைச் சரக்குத்தான் என்று சொல்வது, வரலாறு பற்றிய அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றுள்ள மாதிரியே அன்றும் இருந்தது என்று யாரும் எதிர்பார்க்க முடியாது ; ஆனால் தமிழில், மிகப்பழங்காலத்திலேயே, இதனுடைய தொடக்கநிலைக் கூறுகள் இருந்தன. திறனாய்வு என்பது இலக்கியம் பற்றிய கருத்துகளைப் புலப்படுத்துதலைச் செய்கிறது என்றால், பழங்காலத்திலே உரை என்பது அத்தகையதொரு பணியைச் செய்திருக்கிறது எனலாம். இன்று அறிவியல் மற்றும் பல சிந்தனைகளின் வளர்ச்சி காரணமாகத் திறனாய்வு, ஒரு தனித்துறையாக நவீனமான முறையியல்களோடு வளர்ந்திருக்கிறது என்பது உண்மையே ; ஆனால், திறனாய்வு இன்று செய்கின்ற பணியினை ஏதோ ஒரு வடிவில், குறிப்பிட்ட எல்லைகளுடன் உரை அன்று செய்தது. எனவே இலக்கியத் திறனாய்வு பற்றிப் பேசுகிற நாம் உரைமரபு பற்றிப் பேசுவதும் மிகவும் அவசியமாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:37:58(இந்திய நேரம்)