தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Vainavam-தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    தமிழ் மக்களின் வழிபடு கடவுளாகத் திருமால் தோற்றம் பெற்ற பாங்கையும், திருமால் அவதாரங்கள் பற்றிய செய்திகளையும் இலக்கியச் சான்று வழி அறிந்து கொண்டிருப்பீர்கள்.

    இராமாயண, பாரதக் கதைக் குறிப்புகள் பற்றியும் அந்தக் குறிப்புகளின் வழி, பக்தி இலக்கிய உலகுக்கு விதை தூவப்பட்டிருப்பதையும் உணர்ந்து தெளிந்திருப்பீர்கள். சிலப்பதிகாரம் பக்தி இயக்கத்துக்கு வித்திட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

    தனித்தனிப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுள்களாக அமைந்த காப்பியங்களும், மணிமேகலை போன்ற பௌத்த சமயக் காப்பியமும் திருமால் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளதை அடையாளங் கண்டிருப்பீர்கள்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    திருமால் அவதாரங்களின் திருநாமங்களை எழுதுக.
    2.

    ஈர் ஐம்பதின்மர், நூற்றுவர் ஆகிய சொற்கள் யாரைக் குறிக்கும்?

    3.
    திருமாலுக்குரிய நாள் எது?
    4.
    பஞ்சவர்க்குத் தூது நடந்தவன் யார்?
    5.

    குறள்காட்டும் தாமரைக் கண்ணான் உலகு என்பதன் பொருளாக உரையாசிரியர் பரிமேலழகர் கூறுவது எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-06-2018 18:40:32(இந்திய நேரம்)