Primary tabs
-
3)
சோழர் காலத்தினைச் சேர்ந்த பௌத்தத் திருமேனிகள் யாவை?
இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள அவலோகிதேசுவரர் திருமேனி சோழர் காலத்தது என்று கருதப்படுகிறது. கி.பி.1000 இல் வடிக்கப்பட்ட சோழர் காலப் புத்தர் திருமேனி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. கி.பி.9-10 நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற நிலையிலான மற்றோர் உருவம் நாகப்பட்டினத்தில் செய்விக்கப்பட்டது. மங்களூர் பகுதியில் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர், அவலோகிதேசுவரர் படிமங்கள் கிடைத்துள்ளன.