Primary tabs
-
5)கால்மாறி ஆடிய நடராசர் செப்புத் திருமேனி பற்றிக் கூறுக.
பாண்டிய மன்னன் ஒருவனின் வேண்டுதலுக்கு இணங்கிச் சிவபெருமான் கால்மாறி ஆடினார் என ஒரு தொன்மக் கதை நிலவி வருகிறது. இக்கதைக்கு உயிரூட்டும் வகையில் மதுரை மாவட்டம் பொறுப்பு மேட்டுப்பட்டியில் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு நடராசர் படிமம் கிடைத்துள்ளது. இது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் நடன சபையிலும் சற்றுக் காலத்தால் பிந்திய படிமம் உள்ளது.