தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.6-தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை


        இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து,
    பின்வரும் செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்.

    • துறவு நெறியை வற்புறுத்திக் கூறும் சமயம் சமணம்.
    • சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட
      மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்ற
      பெயர்களும் உண்டு.
    • சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தவர்கள்
      தீர்த்தங்கரர்கள்.
    • பத்திரபாகு முனிவர் காலத்தில்தான் சமண சமயம்
      தமிழ்நாட்டில் நுழைந்தது.
    • தமிழ்நாட்டில் தழைத்தோங்கி இருந்த சமண சமயம் சமயப்
      போர் காரணமாக வீழ்ச்சி அடைந்தது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    (1)
    மகாவீரரின் சீடர்கள் எத்தனை பேர்?
    (2)
    சந்திரகுப்த அரசனின் மதகுரு யார்?
    (3)
    வைசாக முனிவர் யாருடைய சீடர்?
    (4)
    ஒளடதம் என்பதன் பொருள் என்ன?
    (5)
    துறவறத்தின் மூலம் மட்டுமே வீடுபேறு அடைய
    முடியும் என்று கூறிய சமயம் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:35:29(இந்திய நேரம்)