Primary tabs
5
பதிப்புரை
தொல்காப்பியம் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்டவர் எத்துணையர் என வரையறுத்துக் கூற இயலாது; பலர் உரை வரைந்திருப்பர்; அவர் தீட்டிய வுரை யேட்டுச் சுவடிகள் சிதலும் கனலும் புனலும் தின்றன வொழிய நின்றனவே இன்று நாம் காண்பனவாதலின். இதுகாறும் புலவர் போற்றி வைத்துள்ள உரைகளாகக் கண்டு அச்சிற் பதித்து வெளியிடப்பட்டன இளம் பூரணம், நச்சினார்க்கினியம், சேனாவரையம், தெய்வச்சிலையம், கல்லாடம், பேராசிரியம் என்பனவே, பேராசிரியர் உரை பொருளதிகாரம் பிற்பகுதி நான்கு (மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு) இயல்கட்கு உரியவையே கிடைத்துள்ளன. கல்லாடர் உரை சொல்லதிகாரம் 260 நூற்பாக்கட்கு மட்டும் கிடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச்சிலையார் இருவர் வரைந்த வுரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே எனத் தோன்றுகிறது. நச்சினார்க்கினியர் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் வரைந்திருப்பர் என எண்ணினும் இறுதி நான்கியலுக்கும் அவருரை கிடைத்திலது. இளம்பூரணருரையே தொல்காப்பிய முழுவதுக்கும் வரைந்த தொன்மையுரையாகத் தோன்றுவது. இம் முறையில் உள்ளன தொல்காப்பியவுரைகள் எனக் காண்க.
எழுத்துச் சொல் பொருள் என நின்ற மூன்றில் நடுநின்ற சொல்லிற்கு ஐவருரை யமைந்து கிடக்கக் கண்டது வியப்பினும்