தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வில்லாப் பூவின்


வில்லாப் பூவின்

146. குறிஞ்சி
வில்லாப் பூவின் கண்ணி சூடி,
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
5
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து,
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
10
ஐயள், மாயோள், அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:55:03(இந்திய நேரம்)