தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாம்பு அளைச் செறிய


பாம்பு அளைச் செறிய

264. பாலை
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
5
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:13:33(இந்திய நேரம்)