தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேயாறு செல்வாம் ஆயின்


சேயாறு செல்வாம் ஆயின்

400. முல்லை
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ-
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:54:39(இந்திய நேரம்)