தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நலத்தகைப் புலைத்தி


நலத்தகைப் புலைத்தி

330. மருதம்
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:58:02(இந்திய நேரம்)