தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருவரை மிசையது


பெருவரை மிசையது

78. குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:05:29(இந்திய நேரம்)