தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மணி வார்ந்தன்ன


மணி வார்ந்தன்ன

256. பாலை
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:07:00(இந்திய நேரம்)