Primary tabs
யசோதர காவியம்
தற்சிறப்புப்பாயிரம்*
கடவுள் வாழ்த்து
(இதன் பொருள்.) உலகம் மூன்றும் - மூன்றுலகங்களையும், ஒருங்குஉணர் - ஒரே சமயத்தில் ஒருசேர உணரும்இயல்புடைய, கேவலத்து - கைவல்யபதத்தினையடைந்த, அலகு இலாத-எண்ணிறந்தனவாகிய, அனந்தகுணக்கடல்-அனந்தஞானாதிகுணங்கள் கடல் போல்நிறைந்த அருகத்பரமேஷ்டியின், இலகும் மாமலர் சேவடி-விளங்குகின்றசிறந்த தாமரை மலர் போன்ற சிவந்தபாதங்களை, வெவ்வினைவிலகி- தீயவினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு - வீடு பேற்றினை உண்டாக்கிக்கோடற்கு (மோஷத்தை அடை தற்பொருட்டு), ஏத்துவாம்-யாம் துதிப்பாம்,(என்றவாறு.)
(கருத்துரை.) வினைகளின் நீ்ங்கிவீடு அடையவேண்டி முற்றும் உணர்ந்த கேவலியின் (கைவல்ய பதத்தினை எய்திய அருகத்பரமேஷ்டியின்) சேவடியை வணங்குவாம் என்க.
*