Primary tabs
சாதகமாகும். ‘தத்த்வார்த்த ஸ்ரத்தானம் சம்யக்தர்சனம££’(தத்த்-சூ,) என்பது காண்க. இத்தகைய உண்மைத்தன்மைகளை உணரும் அறிவிலராதலின், ‘தத்துவங் கொண்ட கேள்வியுங் கூரறிவுமிலாத் தொண்டர’ என்றார். துருத்தேவதை - துர்த்தேவதா என்ற வடசொற்சிதைவு.
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
(இ-ள்,) கழல் செறி-வீரக்கழலை யணிந்த, மா வலோன் -மிக்கவலியோனாகிய மாரிதத்தன், பாவ மூர்த்தி-பாவமே உருவெடுத்தாற்போன்ற சண்டமாரிதேவியின், படிவம் இருந்த - சிலைவைத்திருந்த, அ தேவிமாடம் அடைந்து - அவள்கோயிலை யடைந்து, வலம் கொண்டு-வலமாகச்சுற்றிவந்து, தேவி-தேவியே, எம் இடர் சிந்துக-எம்முடைய இடர்களைக் களைவாயாக, என்று-என்றுவேண்டி, வணங்கினன்-தொழுதான். (எ-று,)
பாவ வடிவினளாகிய தேவியை மாரிதத்தன் வணங்கின னென்க.
‘அத்தேவி’என்பது, அவள் என்னுஞ் சுட்டின் அளவில் நின்றது. ஈற்றிலுள்ளதேவி, அண்மைவிளி. மாவலோன்என்பதற்கு, குதிரை அல்லது யானையைச் செலுத்துவதில் வல்லவன் எனினுமாம். கழல்-வீரர் காலில் அணியும் ஒருவித ஆபரணம் சிந்துக, வியங்கோள், அரோ, அசை.