Primary tabs
பெற்ற பெற்ற அடுக்குத் தொடர். நாம் பிறந்தபல பிறவிகளிலும் பொறி வாயிலாக வேற்படும் இன்பதுன்பங்களுக்கு நாம் வி்ருப்பு வெறுப்புகள் அடைகின்றோம்; அவற்றானே வினைகள் மீட்டும் நம்மிடம் தொடர்கின்றன; அவ் வினைத்தொடர்பால் பிறவியாகின்றது; இதனை , ‘எய்துவதெய்திப் பின்னும் பிறந்திடஇறந்தது‘ என்றார்.
என்று (சூளா. முத்தி.2.) கூறுவது மறிக. இப்பொழுதுள்ள பிறவியிலும் அச்சம் முதலியன அடைவோமாயின், அவ்வினைகளே வந்து தொடரும் என்பான், ‘இதுவும் அவ்வியல் பிற்றே‘ என்றான். நான்கு கதிகள் கூறப்பட்டதனால், வினை என்றது, ஈண்டு நல்வினை தீவினை யென்ற இரண்டையுமென்க. ‘எண்ணிறந்த வூழிகளெல்லா முலவாத் தடுமாற்றத், தாழிக ளைந்தி னனந்தமுறை--சூழுங், கறங்கி னுழலுங் கதிதோறுந் துன்பம், பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின்‘ (திருக்கலம்,. 72). என்றது ஈண்டு நோக்கற்பாலது. ‘இதுவும்‘ என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவியது. ‘இயல்பிற்றே‘ என்பதில் ஏகாரம் தேற்றம். (31)
(இ-ள்.) தோகாய்-மயில் போலுஞ் சாயலையுடைய தங்கையே, பிறந்த தம் பிறவி தோறும்-(பொறிகள் ஐந்தடைந்து)
1