Primary tabs
இவ்வாசிரியரே கூறுவதனாலும் அறிக. ‘மகுடகோடி‘என்றது, எண்ணற்ற தேவரை உணர்த்திற்று. தேவர்களாய்ப் பிறந்திடினும் நிலைபெற்ற வின்பத்தினை யடையாதவராய் ஆயுள்முடிவில்மரண மெய்துவர் என்பதனை, தேவர்க்ளுக் கிறைவனான தேவேந்திரன்மீது வைத்து, ‘இமையவ ரிறைவரேனும்‘ என்றார். விபவம்-வாழ்வுக் குரிய செல்வம். உருவம் - உடலின் உருவம். பொன்றல் - அழிதல்; தேவர்கள் மரண மடைவதற்குப் பதினைந்துநாள் முன்னரே உடல்நலம் முதலியன வாடித்துன்புறுவர் ஆதலின் ‘தளர்ந்தனர்‘ என்றார்.
என்றார் (சீவக. 2810) திருத்தக்கதேவரும். “இந்திர விபவமேனும் நின்ற தொன்றில்லை யர்£க்கும்” (மேரு.204) என்று கூறியது ஈண்டு ஒப்பிடற் பாலதாகும்.இறைவரேனும், உம்மை - உயர்வுசிறப்பு. (38)
(இ-ள்.) வையத்து - நிலவுலகின், மக்களிற் பிறவியுள்ளும் - மக்கட்பிறவியுள்ளும், மன்னர்தம் மன்னராகி -அரசர்க் கரசராய், திக்கு - எலாம் அடிப்படுத்தும் - எட்டுத் திக்கிலுள்ள வேந்தரையும் தம் அடிக்கீழ்ப் பணியச் செய்யும், திகிரி - சக்ர ரத்தினத்தைக் கொண்ட, அம்செல்வரேனும் - அழகிய விபவங்களையும்பெற்றவராயசக்கிரவர்த்திகளாயினும், அக்குலத்து உடம்பு தோன்றி -அவ்வுத்தமகுலத்துப் பிறந்து, அன்றுதொட்டு இன்றுகாறும் - அன்றுமுதல் இன்றுவரையிலும், ஒக்க நின்றார்