தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 73 -

கொண்டுள்ளேன்.  இனி நான் செய்யவேண்டுவது யாது என்று வினவினா ளென்க.

நயத்தல்-விரும்பல்.  மறவர்,    பலியிடப் பிடித்தேகுவதை யுணர்ந்தும் அச்சமின்மையின்  ‘நடுக்கமும் அடுத்ததில்லை‘ என்றாள்.  ‘நடுக்கமும்‘  என்றதனால் யாதொரு அச்சமும் எனப் பொருள் கொள்ளப்பட்டது. உயிர்கட்கு அச்சம் பலவாயினும் அவை  தொகுத்து ஏழுவகையாகக் கூறப்படும்.

அவை;--

    (1) இம்மையினாலாய அச்சம்;--கடன், மழையின்மை முதலியவற்றாலாயது  

    (2) மறுமையைக்குறித்து ஏற்படும் அச்சம்;--யான் தீய செயல் பல புரிந்துளேனாதலின்  மறுமையில்எப்பிறவி நேருமோ?  என்று  அஞ்சுவது.

    (3) திடீரெனத் தோன்றும் அச்சம்;--திடீரென்று உண்டாகும் நிகழ்ச்சி குறித்து ஏற்படும் அச்சம்;   இடி, சர்ப்பம் முதலியவற்றாலுண்டாவன.

    (4)  எதிர்கால வாழ்க்கையைக்குறித்து  ஏற்படும் அச்சம்;--  இனி யார்  எனக்குப்  புகல் அளிப்பவ ரென்றுஏங்குவது.

    (5) மனம்,  மெய்,  மொழிகளாலாய அச்சம்;-மனம் மெய் மொழி என்ற  மூன்றும்  அடக்கமின்றி  நிகழ்ந்த சிக்கண் ஏற்படும் அச்சம்.

    (6).  வேதனையினாலாய  அச்சம்;  நோய்  முதலிய வேதனையினாலேற்படும் அச்சம்.

    (7).   சாதல்குறித்து  ஏற்படும்  அச்சம்;-  மரணகாலத்தைக்குறித்து  அஞ்சுவது.

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:56:11(இந்திய நேரம்)