தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 83 -
என்று சூடாமணி நிகண்டு 12 74-.ல கூறியதனாலறியலாகும்.  இவ்வெண் குணங்களை யுடைய இறைவனையே‘கோளிற் பொறியிற் குணமிலவே எண் குணத்தான்  றாளைவணங்காத் தலை‘  என்ற குறளில் தேவர் குறிப்பிட்டுள்ளார்.

மணியின் - இன்,  ஒப்பப் பொருளில் வந்தது.  சித்தரே - ஏகாரம்  தேற்றம்; பிரிநிலையுமாம்  சித்தரின்  தன்மை கிரியாபுத்தகம்  சித்த பத்தியில் காண்க.             (48)

      அருகர் வணக்கம்

53. 
பெருமலை  யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
 
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்
 
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்
 
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.

(இ-ள்.) பெருமலை அனைய - பெரிய மலையை நிகர்த்த, காதிப்பெரும் பகை  பெயர்த்து-(தம் உயிருடன் பொருந்தியுள்ள)  காதிவினையாகிய பெரும் பகையை பேறு படுத்திவென்று, பெற்ற - அதனால்  பெற்ற, கடையில்  நான்மை-அனந்த சதுஷ்டயத்துடன், திருமலி - (இந்திரன் இயற்றுவித்த சமவசரணம் முதலிய)  செல்வம் நிறைந்து, திருவொடு  திளைப்பர்  ஏனும் - மோட்சலட்சுமியின் இன்பந்    துய்ப்பவ ராயினும்,   உரிமையின் - (அயோகி  குணஸ்தானத்தின்)  முறைப்படி,  உயி்ர்கட்கு எல்லாம் - உயிர்க ளனைத்திற்கும், ஒரு தனி விளக்கம் ஆகி - தத்தம் பாஷையில் விளக்கமாகத் தெரியும் வண்ணம்,  திருமொழி  அருளும் - திவ்யத்வனியினால் உபதேசஞ்   செய்தருள்கின்ற,தீர்த்தகரர்களே - தீர்த்தங்கர பரமதேவர்களே,  துயர்கள் தீ்ர்ப்பார் - (நமது)  பிறவித் துயர்களை நீக்குவதற்கு உரியர்; (ஆதலின்  அவர்களை வணங்குவம்).  (எ-று.)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:57:49(இந்திய நேரம்)