Primary tabs
இளைஞர் புன்முறுவல் செய்தல்
(இ-ள்.) இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் (சாமுத்ரிகம் என்ற அங்க இலட்சண நூலுள் கூறியவாறு) உடலின் இலக்ஷணம் அமைந்த இளைஞரிருவரும், கொலைக்களம் குறுகிநின்றும்-(மாரியின் பலிபீடத்தின் எதிரிலுள்ள) கொலைக்களத்தை அணுகி நின்றும், குணங்கள் தம்மால்-நற்காட்சி முதலிய நற்குணங்களை யுடையாமல், குலுங்கலர்-(உடலும் மனமும்) நடுங்காதவராய், இயைந்து நிற்ப-(மரணத்திற்கும்) ஒருப்பட்டுநிற்க, (அவ்வமயம் ஏனைமாந்தர் இளைஞரைநோக்கி), ‘நிலத்து இறை மன்னன் - உலகத்தலைவனான இம்மன்னன், ‘நெடிதுவாழ்க என உரைமின் என்றார் - நீடூழிவாழ்வானாக என்று பல்லாண்டு கூறுமின'; என்றனர், மலக்குஇலா மனத்தர் - கலக்கம் இல்லாத நெஞ்சமுடைய இளைஞரிருவரும், தம்வாய்வறியது ஓர் முறுவல் செய்தார்-(தங்களின் முற்பவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிற்கு வரத்) தம் வாயினின்றும் சிறியதொரு புன்முறுவல் புரிந்தனர். (எ-று.)
கொலைக்களம் குறுகியும் மரணத்திற்கு அஞ்சாது நிற்கும் இளைஞரை ஏனைமாந்தர் நோக்கி அரசனுக்குப் பல்லாண்டு கூறுக என, இளைஞர் புன்னகை புரிந்தனரென்க.
கொலைக்களம் குறுசியும் அஞ்சாமல் நிற்கும் திண்மை குணத்தின்பாற் பட்டதாகலின், ‘குலுங்கலர் குணங்கடம்மால'; என்றார். நற்காட்சியுடன் நல்லறிவும் நல்லொழுக்கமும் உடையராதலின், ‘குணங்கள் எனப் பன்மையாகக்