தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 101 -

இளைஞர் புன்முறுவல்  செய்தல்

58.
கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர்  டம்மால்
 
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
 
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
 
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல்  செய்தார்.

     (இ-ள்.) இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் (சாமுத்ரிகம் என்ற அங்க இலட்சண நூலுள்  கூறியவாறு) உடலின் இலக்ஷணம் அமைந்த இளைஞரிருவரும், கொலைக்களம் குறுகிநின்றும்-(மாரியின் பலிபீடத்தின் எதிரிலுள்ள) கொலைக்களத்தை அணுகி நின்றும், குணங்கள் தம்மால்-நற்காட்சி முதலிய நற்குணங்களை யுடையாமல், குலுங்கலர்-(உடலும் மனமும்) நடுங்காதவராய், இயைந்து நிற்ப-(மரணத்திற்கும்)  ஒருப்பட்டுநிற்க,  (அவ்வமயம் ஏனைமாந்தர் இளைஞரைநோக்கி), ‘நிலத்து இறை மன்னன் - உலகத்தலைவனான  இம்மன்னன், ‘நெடிதுவாழ்க என உரைமின் என்றார் - நீடூழிவாழ்வானாக என்று பல்லாண்டு கூறுமின'; என்றனர், மலக்குஇலா மனத்தர் - கலக்கம் இல்லாத நெஞ்சமுடைய இளைஞரிருவரும்,  தம்வாய்வறியது ஓர் முறுவல் செய்தார்-(தங்களின்  முற்பவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிற்கு வரத்) தம்  வாயினின்றும் சிறியதொரு புன்முறுவல் புரிந்தனர். (எ-று.)

கொலைக்களம் குறுகியும்  மரணத்திற்கு அஞ்சாது நிற்கும் இளைஞரை  ஏனைமாந்தர் நோக்கி   அரசனுக்குப் பல்லாண்டு  கூறுக என,  இளைஞர்  புன்னகை  புரிந்தனரென்க.

கொலைக்களம் குறுசியும் அஞ்சாமல்  நிற்கும் திண்மை குணத்தின்பாற் பட்டதாகலின்,  ‘குலுங்கலர்  குணங்கடம்மால';  என்றார்.  நற்காட்சியுடன் நல்லறிவும்  நல்லொழுக்கமும் உடையராதலின், ‘குணங்கள் எனப் பன்மையாகக்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:00:46(இந்திய நேரம்)