தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium

   



- 106 -
 ‘
இடுக்கண்வந் துற்றகாலை யெரிகின்ற  விளக்குப் போல
 
நடுக்க மொன் றானுமின்றி நகுகதா நக்க போழ்தவ்
 
விடுக்கனை யரியு மெஃகா மிருந்தழு  தியாவ  ருய்ந்தார்
 
வடுப்படுத் தென்னை  யாண்மை வருபவந் துறுங்க ளன்றே‘

(சீவக. 509.)

என்ற செய்யுளும், ‘எரிகின்ற  விளக்குப் போல, நடுங்கும் நடுக்கம்‘ என்னும் அதன்  உரையும் காண்க.
‘இடுக்கண் வருங்கால்  நகுக‘  என்றார் தேவரும். அடுக்குவது அடுக்கும் என்பதனை.
 
‘அஞ்சின மெனினும் மெய்யே அடைப’  வந்தடையும் என்றார் (யசோ. 30.) இக்காப்பியத்திலும். தெளிவு - நற் காட்சி (சம்யக் தரிசனம்)
 

‘தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்’

 (சீவக. 2845)

என்றும்,

‘பொய்வகை யின்றித் தேறல் காட்சி’ (சீவக. 1436.) என்றும், கூறுவதனால் அறியலாகும்.

 “
யாது மூரே யாவருங் கேளிர்
 
தீது நன்றும் பிறர் தர வாரர்
 
நோதலுந் தணிதலு மவற்றோ  ரன்ன
 
சாதலும்  புதுவ தன்றே வாழ்த
 
லினிதென மகிழந்தன்று மிலமே முனிவி
 
னின்னா தென்றலு மிலமே... பேர்  யாற்று
 
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
 
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
 
காட்சியிற் றெளிந்தனம்” (புறம். 192)

என்று கூறுவதனாலும் அறியத்தகும்.  இதுவும் முன் வருஞ் செய்யுளும் ஒருதொடர்.  நகுதற்குக் காரணம் வரும்பாட்டில்  கூறுகின்றார்.        (57)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:01:36(இந்திய நேரம்)