Primary tabs
மிருப்பவும் என்னனை நீடுவாழுமாறுகூறப் பணித்த ஊரவரின் அறியாமையை நோக்கி யாங்கள் சிரித்தனம் என்றானென்க.
‘முன்னுயி ருருவிற் கேத முயன்று செய் பாவந் தன்னால; என்றது, இவ்விளைஞர் யசோதரனும் சந்திரமதியுமாயிருந்தபோது செய்த மாக் கோழியின் பலியாலாய தீவினையை, இவ்விவரம், ‘செய்த வெந்திரியக் கொலை‘ என்னும் (யசோ. 312-ம்) பாடலில் வருவதனா லறிக.
எதிரிலுள்ள விலங்கினங்களைக் குறித்து, ‘இன்ன பல்பிறவி'; என்றான். மன்னன் பலியிடப் போகும் உயிருள்ள உருவங்கள் பல என்ப தறிவித்தற்கு, ‘மன்னுயி்ர';என வலியுறுத்தினார். மன்-மிகுதி. ‘மன்னிலை மிகுதி வேந்தே‘என்பது சூடாமணி நிகண்டு. (11, 6.) (58)
அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்
(இ-ள்.) கண்ணினுக்கு இனியமேனி - (காண்பவரின்) கண்களுக்கு இனிமை தரும் மேனியுடைய, காளைதன் கமலவாயில் - அபயருசியின் கமலமலர்போன்ற வாயினின்றுமுண்டான, பண்ணினுக்கு இனிய சொல்லை - கீதத்தினும் இனிய சொற்களை, படியவர் - அவ்விடத்திலுள்ளார் பலரும், முடியக் கேட்டு- முற்றவுங் கேட்டிருந்து, அண்ணலுக்கு அழகிது - (இம்மாற்றம்) சிறந்தோனாகிய அபயருசிக்கு ஏற்றதாகும், ஆண்மை அழகினுக்கு அமைந்த தேனும் - இவ்வாண்மை அழகுக்கேற்ப அமைந்ததே ஆயினும், பெண்ணினுக்கு அரசி ஆண்மை