தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 112 -

“புரவல  கருதிற்றுண்டேல்  அருளியல் செய்து  செல்க ஆகுவதாக”  என்றான்.

அருளியல், குறிப்பு மொழி; இனி, எண்ணியவாறு‘ என்னும் பொருளியல்  உயர்வாகக் கூறினானுமாம். (61)

வேந்தன்,  கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்

66. 
அன்னண மண்ணல் கூற  வருளுடை  மனத்த னாகி
மன்னவன் றன்கை வாளு  மனத்திடை  மறனு மாற்றி
என்னினி யிறைவனீயே யெனக்கென  விறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.

(இ-ள்.) அன்னணம் அண்ணல்கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி  கூறலும், மன்னவன் - மாரிதத்தவரசன், அருளுடை  மன்னத்தன் ஆகி - அருள்  நிறைந்த மனமுடையவனாய்,  தன்  கை வாளும் - தன்கையிலுள்ள வாளாயுதத்தையும்,  மனத்திடை  மறனும் - மனத்திலுள்ள தீய நினைவையும்,  மாற்றி - ஒருங்கே  நீக்கி, இனி  என் - (மாக்கோழியின்பலியால்  துன்புற்ற உங்களை விட வேறு சாட்சியம் இனி)  என்ன இருக்கின்றது, எனக்கு நீயே இறைவன் - எனக்கு இனி நீயே உண்மையான தெய்வம், என-என்று கூறி,  இறைஞ்சி நின்று - வணங்கி  நின்று, குமர - இளைஞரே.  நுங்கள்  பவத்தொடு பரிவும் - நும் பழம்பிறவிகளின்  வரலாற்றோடு நீவி்ர் எய்திய துன்பங்களையும், பன்னுக - எனக்கு  உரைப்பீராக, என்றான் - என்றனன்.   (எ-று.)

அண்ணல் கூற மாரிதத்தன் அருளுடன் வாளையும் தன் மனத்தின்கண்ணுள்ள   கொலைக்குற்றமாகிய   தீய எண்ணத்தையும்  நீக்கி வணங்கி  நுமது  பவமும்  பரிவும்கூறுக  என்றானென்க.

இனி, இறைவன் நீயே  எனக்கு  என்றதனால், இனி, என்இறைவன் நீயே;  சண்டமாரி  அல்லள் என்ற  பொருளும்தோன்றும்.            (62)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:02:34(இந்திய நேரம்)