Primary tabs
அபயருசியின்
அறவுரை
(இ-ள்.)மேகம் - மேகமானது, மின்னொடு தொடர்ந்து-ஓர் மின்னலுடன் தொடர்ந்து சென்று, மேதினிக்கு ஏதம் நீங்க-உலகத் துயிர்களுக்குத் துன்பம் விலகுமாறு, பொன்வரை முன்னர் நின்று - பொன்மலையின் முன் நின்று, புயல் பொழிந்திடுவதே போல்-நீரைப் பெய்வது போல, அன்னமெல் நடையினாளும் - அன்னம் போல மெல்லிய நடையினையுடைய அபய மதியும், அருகு அணைந்து-தன் பக்கத்தே சார்ந்து நிற்ப, மன்னவ குமரன் - அரசகுமரனாகிய அபயருசி, உருகும் வண்ணம் - அங்கு குழுமி யிருப்போர் உள்ளம் உருகும்படி, மன்னற்கு-மாரிதத்த வரசனுக்கு, அறமழை பொழியல் உற்றான்-அறவுரை யாகிற சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கினான். (எ-று.)
மின்னல் விரவிய மேக மானது, மேதினியிலுள்ளோரின் வருதத்தை நீக்கப் பொன் மலையினிடம் (சென்று) மழை பொழிவது போல; அபயருசி, அபயமதி பக்கத்திலிருக்க மாரிதத்தனுக்கு அற முரைத்தற்கு ஆரம்பித்தனனென்க.
மேதினி-பூமி; ஆகுபெயர். மழையினால் மேதினியிலுள்ள பயிர் முதலிய சகல வுயிர்களும் இன்ப மெய்துவது போல; இவ்வற மழையினால் தருமப் பயிரானதுவளர்ந்து விலங்கினமும் உய்வு பெற்று மானிடரும் தீயசெயலி னின்றும் விலகி (கோபம் முதலிய) தாபம் தணிவதற்குக் காரண மாதலின், அற வுரைக்கு மழை உவமையாயிற்று. அபயருசியை மேகமாகவும், அபயமதியை
1 பாடம் நடைய னாளு.