Primary tabs
யசோதரன், நிலமகளின் திலகம் போன்ற உஞ்சயினியிலிருந்து அரசர் பலரையும் தன் அடிப்படுத்திப் பேராசனானா னென்க.
இரு நிலம்-விசாலமான பூமி; வளமிக்க பூமியுமாம். சிறந்த நகரத்தை நிலமகளுக்குத் திலகம் எனக் கூறும் வழக்கினை சூளாமணி முதலியவற்றா லறியலாகும். அடிப்படுத்தல் - வணங்கச் செய்தல், குரு மேன்மையெனினுமாம். குவலயம்-நிலமாகிய வட்டம். (12)
மன்னனின் மனமாட்சி
(இ-ள்.) திருத்தகு குமரன்-திருமகள் தங்குதற்குத் தகுதிவாய்ந்த குமரனாகிய யசோதரன், செல்வச் செருக் கினால்-, நெருக்கப்பட்டு-அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின்-புயற்காற்றினால் மோதப்பட்ட கடல் பொங்குவது போல, பொங்கி மறுகிய மனத்தனாகி-காமம் முதலிய உட்பகை ஆறினாலும் பொங்கிக் கலங்கிய மனமுடையவனாகி, உருத்து எழு சினத்திற் சென்ற-மிக்கெழுகின்ற கோபத்தின் பாற் பட்ட, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றிமனம்மெய் மொழிகளில் ஒன்றுபட்டு (நிற்க), அருத்த காமத்து அருத்தி -செய்து பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு, அறத்திறம் அறத்துறந்தான் - அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான். (எ-று.)
செல்வச் செருக்குடைய யசோதரன், கலக்கத்தால் பொருளின்பங்களிலேயே மயங்கி அவற்றிற்கு காரணமாகிய அறத்தை அறவே மறந்துழன்றன னென்க.
திருத்தகு குமரன் லக்ஷ்மிகடாக்ஷம் பொருந்தியவன்.பொருள் சேர் (த்திரு)க்கும் பெருமிதத்தால் ஏற்படும்