Primary tabs
வெளிப்படையாகக் கூறிய அரசியின் இழிசொல்லைக் கேட்டவுடன் தோழி இருகாதுகளையும் பொத்திக்கொண்டு, ‘நின் மனத்தில் என்று மில்லாத இப் புனைந்துரையைக் கூறியதற்குக் காரணம் என்ன? என்று வினாவினா ளென்க.
இவர்தல் - படர்தல், வியாபித்தல், குழலி, அண்மை விளி. தான், அசை. (27)
அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.
(இ-ள்.) ‘வாள் அளவு உண்கண் மாதே - வாள் போன்ற கூரியதும் மை தீட்டப் பெற்றதுமாகிய கண்களையுடைய மாதே, அவன் அமுதவாயில் - அப் பாடலைப்பாடியவனுடைய அமிர்தம் போன்ற வாயினால், மாளவ பஞ்சமப்பண் - மாளவபஞ்சமம் என்ற பண்ணை, மகிழ்ந்து கேளலன் ஆயின் - மகிழ்ந்து கேட்கிலேனாயின், நாமும் கேள் அலம் ஆதும் - நாமிருவரும் நட்பினரல்ல ராவோம்; உரை மறுத்து மொழியின் - என் உரையை மறுத்துச் சொல்வாயாயின், நாள் அவம் ஆகி - என் வாழ்நாள் வீண்நாளாதலின், ஆவி இன்னே நடந்திடும் - என் உயிரும் இப்பொழுதே நீங்கிவிடும்; நடு ஒன்று இல்லை -இவ்விரண்டிற் கிடையில் வேறொன்றும் நிகழ்தற்கில்லை'; என்றாள் - என்று (தோழிக்குக்) கூறினாள்; (எ-று.)
அரசி, தோழியை நோக்கி, ‘அப் பண்ணைப் பாடியவனைக் கூடி மகிழ்ந்து பாடலைக் கேளேனாயின் என் ஆவி நடந்திடும'; என்றாள் என்க.
1 கேளலமாயி.
2 யின்றே.
3 வொண்கண்.