தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 148 -

பரிவு கொண்டனை என் - நின் உள்ளத்துக் துன்புற்றது என்ன?  நின் பெருமை நன்றே  - நின்னுடைய பெருமை நன்று‘ என்றாள் - என்று கூறினாள்; (எ-று.)

      குணவதி,  அரசியின்  கருத்தை  அறிந்தாளாயினும், அதனை  மாற்றக் கருதி,   தான் அறியாதாள்போல்  பிறிது கூறினா ளென்க.

      ‘அறிந்தனளல்லள்‘ என்பதை உரு சொல்லாகக் கொள்ளலும் ஆம்.  மற்று, அசை,  நனவு - விழிப்பு,  ஜாக்ரதை.            (26)

அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக்
கூற, தோழி அஞ்சுதல்.

99.
என்மனத் திவரு  மென்னோ யிவணறிந்1 திலைகொ லென்றே
 
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
 
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்
 
சின்மலர்க் குழலி  யென்றே2  செவிபுதைத் தினிது சொன்னாள்.

      (இ-ள்.) (அமிர்தமதி தோழியை நோக்கி) ‘என்மனத்து இவரும் - என் மனத்தில் படர்கின்ற,  என்  நோய் - எனது காமநோயை, இவண் - இவ்விடத்தில்,  அறிந்திலைகொல் என்று -(நீ) தெரிந்துகொள்ளவில்லைபோலும்‘  என்று சொல்லி,  அவட்கு - அத் தோழிக்கு,  தன்  மனத்தினை- தன்  உள்ளக்கருத்தினை,  உரைத்திடுதலோடும் - வெளிப்படையாகக் கூறியவுடனே,  (அவள்), செவி புதைத்து - (தன்)  இருகாதுகளையும் பொத்திக்கொண்டு,  ‘சில் மலர் குழலி - சிலவாகிய மலரை யணிந்த  கூந்தலையுடைய  அரசியே,  நின் மனத்து - உன் மனத்தில்,  இலாத - பொருந்தி யில்லாத, சொல்லை -இழிசொல்லை,  நீ புனைந்து  அருளிற்று - நீயே  கற்பனையாகச் சொல்லியது,  என் கொல் - என்ன காரணம்?  என்று இனிது  சொன்னாள் - என்று  இனிதாகச்சொன்னாள்; (எ-று.)

1 பாடம் இவளறிந்.

2 யன்றே

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:08:26(இந்திய நேரம்)