Primary tabs
(இ-ள்.) தையலாள்-தையலாகிய அமிர்தமதி, மெல்லத் தேறி - மெதுவாகத் தெளிந்து, சாரனை - சோரநாயகனை மகிழ்ந்து நோக்கி-மகிழ்ச்சியோடு பார்த்து, வெய்ய நீ முனிவு செல்லல்-விருப்பமுள்ள நீ கோபஞ் செய்யாதே; மேதினிக்கு இறைவன்தன்னோடு-பூமிக்கு அரசனாகிய யசோதரனோடு, ஐய ஆசனத்தின் உம்பர்-அழகிய (அர்த்த) ஆசனத்தின்மீது, அரச அவை இருந்து-அரசசபையில் வீற்றிருந்ததனால், வெய்யபாவங்கள் செய்தேன் - கொடிய பாபம் செய்தவளாயினேன்; விளைந்தது - நிகழ்ந்ததை, விளம்பலன் - முன்னரே சொல்லிற்றிலேன், என்றாள் - என்று சொன்னாள். (எ-று.)
தையல், பாகனை நோக்கி, ‘கோபியாதே‘ என்று கூறி, காலந்தாழ்த்ததன் காரணம் கூறினா ளென்க.
சாரன்-ஜாரன்; வடசொல். ஜாரன்-சோர நாயகன். ‘மேதினிக்கிறைவன்‘ எனவே, தனக்கு இறைவனாகக் கருதாமை வெளியாயிற்றென்னலாம். பாகனோடு கூட வேண்டிய காலத்து கூடாததையும் அரசனோடு அமர்ந்திருந்ததையும் தொகுத்து ‘வெய்ய பாவங்கள் செய்தேன்‘ என்றாள். கண்டாய், முன்னிலை அசை. (43)
அரசியின் உறுதிமொழி
(இ-ள்.) காளை-இளையோய், அகம் - தன்னிடத்தே, பொற்பு கழுமி-அழகு நிரம்பப்பெற்று, யாவும்-(தன்னை அடைந்த உயிர்கள்) எல்லாவற்றையும், இனிது புரந்து-இனிமை பெறக் காப்பாற்றி, அரந்தை தீர்க்கும்-அவற்றின் துன்பத்தைத் தீர்க்கின்ற, கற்பகம்-கற்பகத்
1 துணைவருபவரு