Primary tabs
வீடுபேறே எண்ணக் கடவதென உணர்த்தவேண்டி,‘எண்ணமற் றொன்றுமின்றி'; என்றான். மறுமையின்பம்எய்தாமையேயன்றி இம்மை யின்பமும் கெடுமென்பான், “மானுயர் வாழ்வு மண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே” என்றான். (62)
(இ-ள்.) அன்னை -தாயே, அன்றியும் - அதுவன்றியும், உன்னின் முன்னர் - உனக்கு முன், நின் குலத்து உளோர்கள் - உன் குலத்துதித்த முன்னோர்கள், உயிர்கொன்று கன்றும் உள்ளம் - பல் உயிர்களையும்கொன்று அச்செயலில் அடிப்பட்ட உள்ளத்தோடு,கொடுமை செய் தொழிலர் அல்லர் - தீமை செய்யுந் தொழிலையுடையவர் அல்லர்; இன்று உயிர் கொன்ற பாவத்து-(நின் சொற்படி) இப்பொழுது உயிரைக் கொன்ற பாவத்தால், நமக்கு - --, மேலால் இடர் பல விளையும் - பின்னர்த் துன்பங்கள் பல உண்டாகும்; (ஆதலின்), நீஅருளிற்றெல்லாம் - நீ கூறிய இவை அனைத்தும், நன்றிஒன்று அன்று -நன்மை தருவதொன்று அன்று. (எ-று.)
முன்னோர் யாருமே செய்யாத இக் கொலைத்தொழிலைச் செய்யும்படி சொல்லுகின்றாயே! இச்செயல் தீமையே தரும், நன்மை தாராது என்றானென்க.
‘உன்னின் முன்னர்...தொழில ரல்லல்'; என்றதனால் ‘நீயும் அவ்வாறே ஒழுகத் தக்கவள், நீ இது சொல்லுதல்தகாது'; என்பது குறிப்பு. உன்னின் - ஆலோசிக்குமிடத்து எனினுமாம். கன்றி - அடிப்பட்டு. ‘கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார'; (சீவக. 2776)என்பது காண்க. ‘எல்லாம்'; என்றது, சண்டமாரியே கனவில் தோன்றிக் கூறினாளென்றதும் அவளுக்குப் பலி