தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 233 -

உருவினள் ஆயினள் - நீர் ஒழுகும் புண்ணையுடைய உடம்பினையுடையளாய், முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் - உடல் நிறைந்த சீயினால் முடை நாற்றம் நாறும் மேனியளாய், தொழுவல் பல் பிணி நோய்களும் - தொழுநோய் முதலிய வலிய பல பிணிகளும், துன்னினாள் - அடைந்தாள் (எ-று.)

அரசி தொழுநோய் முதலிய பல நோய்களை அடைந்தாளென்க.

அஃகுதல் - குறைதல், முடை - துர்நாற்றம்,  இந்நோய் இடையில் தோன்றியதாதலின், ‘ஆயினள்‘ என்றார்.  பிணிநோய் - பிணிக்கும் நோய்; ஒருபொருட் பல்மொழியுமாம்.

211. 
உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
 
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
 
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
 
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.

(இ-ள்.) உம்மை வல்வினையால்- முற்பிறப்பிலாகிய வலிய தீவினையினால், உணர்வு ஒன்று இலாள் - சிறிதும் அறிவு இல்லாதவளாயினாள், இவை - நோய் முதலிய இவை, இம்மை செய்த வினைப்பயனே - இப்பிறப்பில் (இவள்) செய்த தீவினைப் பயனே, இனி, இனிமேல், இவ்வினை - இவ்வினைகள், எம்மையும் நின்றிடும் - எப்பிறப்பிலும் நின்று வருத்தும், இவள் பொன்றினும் - இவள் இறந்தாலும், பொன்றல - (இவ்வினைகள்) நாசமடையா, பொய்ம்மை அன்று - இது நிச்சயம்.   (எ-று.)

உம்மைவினையால் பாகனோடு சேர்க்கை யாயிற்று; பாகன் சேர்க்கையால் இம்மையில் நோயும் மறுமையில் நரகபந்தமும் ஆயின என்க.

உம்மை - முற்பிறப்பு.  இம்மை - இப்பிறப்பு.  எம்மையும் - எப்பிறப்பும்.  அமிர்தமதி, முற்பிறப்பின் வினைத் தொடர்பால் பாகனோடு சேர்ந்தனள் ஆதலின் அதனை, ‘உம்மை வல்வினையால் உணர்வொன்றிலள்‘ என்றும், தீயஎண்ணத்தால் குஷ்டரோஹியுடன் சேர்ந்ததனால் இப்பிறவி




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:22:20(இந்திய நேரம்)