தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 247 -
229. 
மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
 
 
 
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
 
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்
 
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.

(இ-ள்.) இறைவனே -, மற்றொரு கள்வன் தன்னை - மற்றுமொரு திருடனை, வதைசெய்யும் முன்னும் பின்னும் - கொல்வதற்கு முன்னரும் கொன்ற  பின்னரும், இற்று எனநிறை செய்திட்டும் - அவன் உடலின் எடை இவ்வளவு என்று நிறை செய்து பார்த்தும், பேதம் காணேன் - (எடையில் சிறிதளவும்) வேறுபாடு காணவில்லை: ஒருவனை - மறறொரு கள்வனை, உற்றது ஓர்குழியில் -பூமியின் கீழ்ப்பொருந்தியதொரு குழியில், மூடி சில நாள் வைத்தும்-உயிருடன் மூடிச் சில நாள் வைத்திருந்தும், அவன் உயிர்போயிட்ட வழி - அவனது உயிர் சென்ற வழி,  ஒன்றும் - சிறிதும், கண்டிலேன் - யான் காணவில்லை.  (எ-று.)

ஒருவிதத்திலும் உயிரைக் காணவில்லை யென்றானென்க.

‘உயிருக்கு எடை உண்டேல், உயிருள்ள போதும் இறந்தவுடனேயும் பேதம் காணவேண்டும்‘,  ‘உடலில் உயிர் உண்டேல் பூமியில் புதைத்தவன் உயிர் சென்ற வழி காணப்படல் வேண்டும்‘  அங்ஙனமின்மையால் உயிர் என்ப தொன்று இல்லை என்று கொண்டான்.  காற்று  நுழையாதவாறு புதைத்து வைத்தலின் ‘உற்றதோர் குழி‘  என்றான். பூமியில் (புதைத்து) அரக்கினால்  மெழுகியதென்கிறார் வடமொழிக் காவ்யத்தில்.                        (10)

முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.

230. 
பையவே1 காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
 
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற
 
ஐயென2 வங்கி தோன்றி யதனையு மெரிக்க3 லுற்ற
 
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல்4 வேண்டும்.

 

1 பவ்யனே.

2 ஐயனே.

3 மெரிய

4 யுணர.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:24:36(இந்திய நேரம்)